PKL 10 Champions: 2022ல் இறுதிப் போட்டியில் தோல்வி – முதல் முறையாக சாம்பியனான புனேரி பல்தான்!

Published : Mar 02, 2024, 06:52 AM IST
PKL 10 Champions: 2022ல் இறுதிப் போட்டியில் தோல்வி – முதல் முறையாக சாம்பியனான புனேரி பல்தான்!

சுருக்கம்

கடந்த ஆண்டு நடந்த 9ஆவது சீசனில் தோல்வி அடைந்த நிலையில் புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை 3 புள்ளிகள் வித்தியாத்தில் வீழ்த்தி முதல் முறையாக புனேரி பல்தான் அணியானது சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து மொத்தமாக 9 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது.

பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி, பெங்களூரு காளைகள், குஜராத் ஜெயிண்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், யு மும்பா, யுபி யோத்தாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் என்று மொத்தமாக 12 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில், கடைசியாக புனேரி பல்தான் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இதில் எந்த அணி ஜெயிச்சாலும் முதல் முறையாக டிராபியை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. ஹைதராபாத்தில் நடந்த புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் ஹரியனா ஸ்டீலர்ஸ், புனேரி பல்தான் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அடுத்தடுத்த கோல்கள் அடித்து புள்ளிகள் அடிப்படையில் புனேரி பல்தான் அணி முன்னிலையில் இருந்தது.

ஹரியானா அணியும் 3, 5, புள்ளிகள் குறைவாக பெற்று வந்த நிலையில் கடைசியாக புனேரி பல்தான் அணியானது 28 புள்ளிகள் பெற்றது. ஹரியானா ஸ்டீலர்ஸ் 25 புள்ளிகள் மட்டுமே பெறவே 3 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்தான் அணியானது வெற்றி பெற்று முதல் முறையாக புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனின் டிராபியை கைப்பற்றியது.

இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் டிராபியை வென்ற நிலையில், புனேரி பல்தான் 2ஆவது இடம் பிடித்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பேட்டில் தில்லுமுல்லு? ராகுல் தெவாட்டியாவை கையும் களவுமாக பிடித்த அம்பயர்!
IPL: 'அந்த' காரணத்தால் இந்திய அணியில் புறக்கணிப்பு.. பிசிசிஐ தேர்வுக்குழுவை விமர்சித்த முகமது ஷமி!