அய்யோ.. தலித் மக்கள் படுகொலை, தலித் பெண்கள் கற்பழிப்பு தொடர்கிறது.. ஸ்டாலின் அரசை எச்சரித்த திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2022, 12:49 PM IST
Highlights

அதிக அளவில் தலித் பெண்கள் குறி வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும், அதில் இந்தியாவிலேயே தமிழகம் 5வது இடத்தில் இருக்கிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிக அளவில் தலித் பெண்கள் குறி வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும், அதில் இந்தியாவிலேயே தமிழகம் 5வது இடத்தில் இருக்கிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தலித் மக்கள் படுகொலை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும், அதைத் தமிழக முதலமைச்சர் இனி அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-  தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு சாதிய வன்கொடுமைகள் நடந்தன, திமுக ஆட்சியில் அந்த நிலை நீடிக்க கூடாது, முதலமைச்சர் அவர்கள் உறுதியோடு அதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் 1144 குற்றங்கள் நடந்திருந்தன, 2020 ஆம் ஆண்டில் 1274 வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்தன,  2021ல் தலித் மக்கள் மீதான வன்கொடுமை குற்றங்களின் எண்ணிக்கை 1377 ஆகா உயர்ந்திருக்கிறது.

2021-இல் தமிழ்நாட்டில் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 61  தலித்துகளை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது,  ஒட்டு மொத்த இந்தியாவில் தலித் படுகொலைகளில் 2020ஆம் ஆண்டு 5 ஆவது இடத்தை வகித்த தமிழ்நாடு இப்போது 7வது இடத்தில் இருக்கிறது, தலித் பெண்கள் மீதான தாக்குதலில் துன்புறுத்துவது, கண்ணியக் குறைவாக நடத்துவது போன்ற குற்றங்களைவிடவும், தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவது தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில் 123 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது. 

இதையும் படியுங்கள்: 8 வழிச்சாலையில் நாடகம்.? மக்களிடம் பகிரங்கமாக சொல்லுங்க... ஸ்டாலினை ரவுண்டு கட்டும் அண்ணாமலை.

அதில் 88 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமியர்கள் ஆவர், தலித் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்களில் இந்தியாவிலேயே 5வது இடத்தில் தமிழ்நாடு இருந்தது, 2021 ஆம் ஆண்டிலும் 123 பேர்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் அதில் 89 பேர் சிறுமியர் என்றும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை தெரிவிக்கிறது.

தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனமாக இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 2020இல்  பதிவு செய்யப்பட்டு அந்த ஆண்டின் இறுதிவரை புலன்விசாரணை செய்யப்படாமல் இருந்தால், வன்கொடுமை வழக்குகள் 694 என தெரிவிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் இறுதியிலோ 825 வழக்குகள் புலன்விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன, 2020 ஆம் ஆண்டை விட 2011 ஆம் ஆண்டில் கூடுதலான வழக்குகள் விசாரணை இன்றும் நிலுவையில் உள்ளன, பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சுமார் 40 சதவீத வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: தேர்தல வாக்குறுதி கொடுத்தீங்க.. 15 மாசம் ஆயிடுச்சி என்ன பண்ணீங்க..? முதல்வரை விளாசும் ஓபிஎஸ்

அத்துடன் 186 வழக்குகள் தவறான தகவல், போதுமான ஆதாரம் திரட்ட முடியவில்லை எனக் காரணம் காட்டி காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.

காவல்துறையின் மெத்தனமான போக்கை வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு காரணம் என்பதை தேசிய ஆவண காப்பகம் அறிக்கை புலப்படுத்துகிறது, இதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளே இல்லாத மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாட்டிற்கு உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
 

click me!