சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி மார்ச் 9 (நாளை) துபாய் சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த தொடரில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
இந்திய அணியில் விராட் கோலி முதல் முகமது ஷமி வரை ஒவ்வொரு வீரரும் அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில், சில வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறனுடன் ஜொலிக்க வாய்ப்புள்ளது.