Relationship Tips: உங்கள் துணை கள்ள உறவில் இருப்பது தெரிந்து விட்டால்..உடனே என்ன செய்யணும், என்ன செய்ய கூடாது?

First Published Oct 16, 2022, 2:18 PM IST

Relationship Tips: உங்கள் துணை வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் விஷயம் உங்களுக்கு தெரிய வந்தால், முதலில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்ன என்பதை பார்ப்போம். 

உங்கள் திருமணத்திற்கு பிறகு, உங்கள் துணை வேறு ஒருவரின் வசீகரத்தால் ஈர்க்கப்படலாம். திருமணத்திற்கு பிறகு உங்கள் துணை வேறொரு உறவில் இருப்பது உங்கள் உறவை சீர்குலைக்கும். பிறருருடன் தொடர்பில் இருப்பது உங்கள் துணைக்கு மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கலாம். அப்படி, உங்கள் துணை வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் விஷயம் உங்களுக்கு தெரிய வந்தால், முதலில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்ன என்பதை பார்ப்போம். 
 

 நெருங்கிய நபருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

 உங்கள் நெருங்கிய நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நம்பிக்கை வைத்து உங்கள் உணர்வுகளை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள். அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அவர்களின் ஆலோசனையைப் பெறவும். இது நீங்கள் நன்றாக உணர உதவுவதோடு, அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் உங்களுக்கு வழிகாட்ட உதவும். 

என்ன காரணம்:

உங்கள் துணை உங்களை எதனால் ஏமாற்றினால் என்பதை பற்றி ஆலோசனை செய்யவும். உங்கள் துணைக்கு பாலியல் வாழ்வில் திருப்தி இல்லாமை காரணமா..? என்பது போன்ற கோணங்களில் அலசி ஆராயவும். இது உங்கள் தவறு அல்ல என்பதை புரிந்து கொள்ள உதவும். சில நேரம் உங்களின் பிரச்சனைகள் காரணமாக உங்கள் துணை வேறொரு நபரை தேடி சென்றிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

 மேலும் படிக்க...Relationship Tips: காதலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி..? இதோ உங்களுக்கு தேவையான வழிமுறைகள்..!

பழிவாங்க வேண்டாம்:

நீங்கள் அவரை பழிவாங்க வேண்டும் என்று உடனே நினைக்க தோன்றும். அதுவே, சில நாட்கள் சென்றதும் அவை தவறு என்பதை உணரலாம். எனவே, உங்கள் துணையை பழிவாங்குவது, எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கும். அதற்கு பதிலாக, நீங்கள் இருவரும் சமரசமாக பேசி பிரிந்து கொள்ளுங்கள். 

 மேலும் படிக்க...Relationship Tips: காதலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி..? இதோ உங்களுக்கு தேவையான வழிமுறைகள்..!

வாய் விட்டு அழுக வேண்டும்:

இந்த நேரத்தில் உங்கள் இதயமும் நம்பிக்கையும் உடைந்து இருக்கும். அத்தகைய சூழ்நிலையை எளிமையாக கையாள்வதற்கு வாய் விட்டு அழுவது உங்களை பலவீனமாக்காது, இது உங்களை வலிமையாக்கும். மேலும், மன அழுத்தம் காரணமாக நீங்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கும். 

 மேலும் படிக்க...Relationship Tips: காதலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி..? இதோ உங்களுக்கு தேவையான வழிமுறைகள்..!

click me!