Power Shutdown in Chennai : சென்னையில் இந்த முக்கிய இடங்களில் இன்று மின் தடை.! உங்க ஏரியா இருக்கா.?

First Published Aug 19, 2024, 6:06 AM IST

மக்களின் அடிப்படை தேவையான மின்சாரம், அதன் பாதையை சீரமைக்க தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று (19.08.2024) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

 நவீன யுகத்தில் மின்சாரத்தின் பங்கு

நவீன காலகட்டத்தில் மின்சாரம் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. மின்சாரம் இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும் என்ற நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு விட்டனர். சமையல், பொழுதுபோக்கு, வேலை என எங்கு பார்த்தாலும் மின்சாரத்தின் பங்கு அதிகமாக உள்ளது. முன்பு பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் மனிதன் அன்றைய பொழுதை கழித்து விடுவான். ஆனால் தற்போது ஒரு நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் வாழ முடியாத நிலையானது உருவாகியுள்ளது.

9 மணி முதல் 2 மணி வரை மின் தடை

அந்த வகையில் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பாங்காற்றிவரும் மின்சாரம் அதன் பாதையை சீரமைக்க தமிழகத்தில் நாள்தோறும் பல இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று(19.08.2024) காலை  9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Latest Videos


ஆதம்பாக்கம்:

சோலைப்பன் தெரு, யூனியன் கார்பைடு காலனி, புழுதிவாக்கம் மெயின் ரோடு, எம்.பி.ராஜகோபால் தெரு, பக்த சிங் தெரு, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, ஆறுமுகம் தெரு, செங்கல்வராயன் தெரு.

Raksha Bandhan 2024: ஏன் இந்த நேரத்தில் ராக்கி கயிறு கட்டக் கூடாது? ரகசியம் இதுதான்!

அடையாறு :

1வது அவென்யூ சாஸ்திரி நகர், எல்பி சாலையின் ஒரு பகுதி, பரமேஸ்வரி நகர் பகுதி, 1வது மற்றும் 3வது பத்மநாபா நகர். பணிகள் விரைவில் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

click me!