மாநாடு மைதானத்தில் போலீஸ் ஆய்வு
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக விழுப்புரம் ஏ.எஸ். பி.யிடம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு ஒன்று அளித்தார். இதனையடுத்து மாநாடு மேடை அமைக்கப்படவுள்ள இடத்தை காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு 40 ஏக்கர் நிலப்பரப்பும், பைக் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு 5 ஏக்கர் நிலப்பரப்பு,பொதுமக்களுக்கு எந்த இடர்பாடுகளும் இல்லாமல் பார்க்கிங் ஏரியா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.