செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த அமலாக்கத்துறை
அதிமுக ஆட்சி காலமான 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அமைச்சர்வையில் முக்கிய பொறுப்பில் இருந்தார் செந்தில் பாலாஜி, அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்களால் திமுகவிற்கு பல்டி அடித்தார் செந்தில் பாலாஜி, அங்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கும் மின்சாரத்துறை வழங்கப்பட்டது.