சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 4 இளம்பெண்கள்.. ஒரு நைட்டுக்கு இவ்வளவு வா?

First Published May 30, 2023, 8:58 AM IST

சென்னை மயிலாப்பூர் பகுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதனை தடுக்கும் நோக்கில் சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி விபச்சார புரோக்கர்கள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் சிவி. ராமன் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து, ரகசியமாக கண்காணித்த போது விபச்சார தொழில் நடைபெறுவது உறுதியானது. அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரைகுறை ஆடைகளுடன் கென்யா நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

இதனையடுத்து விடுதி காப்பாளர் மற்றும் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 2 கைது  செய்யப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

click me!