திருமணம் ஆகி குழந்தை பெற்றபின்பும் கும்முனு இருக்கும் ஆல்யா மானசா!! மணமகள் கெட்டப்பில் மனதை அள்ளும் போட்டோஸ்!!

First Published Sep 12, 2021, 3:19 PM IST

செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஆல்யா தினமும் விதவிதமான போட்டோ ஷூட்களை வெளியிட்டு வரும் நிலையி, தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது. 

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். 

குழந்தை பிறந்த பிறகு குண்டான ஆல்யா மானசா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் கணிசமாக குறைத்தார். 

தற்போது ஸ்லிம் லுக்கில் செம்ம யங்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்த சிரியலுக்கு விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. டிஆர்பி -யிலும் கெத்து காட்டி வருகிறது.
 

இந்த சீரியல் ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்கிற ஒரு பெண்ணின் துடிப்பான முயற்சியை அவர் எப்படி தன்னுடைய குடும்பத்தை சமாளித்து, கணவரின் துணையோடு ஜெயிக்கிறார் என்பதை பொறுத்து எடுக்கப்பட்டு வருகிறது.
 

சீரியல், நிகழ்ச்சிகள், மாடலிங் என படு பிசியாக இருந்தாலும், சோசியல் மீடியாவில் தினமும் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகுடன் மிளிரும் ஆல்யா மானசா தற்போது சந்தன நிற பட்டு சேலையில் செழித்த அழகில் கும்முனு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ளது.
 

click me!