காதல் கணவருடன் கவர்ச்சி உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... பெரிய வீட்டு புதுமண தம்பதியின் அட்ராசிட்டி...!

First Published Dec 29, 2020, 11:59 AM IST

திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக காதல் தம்பதி கிறிஸ்துமஸ் பண்டிகையை செம்ம ஹேப்பியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். 
 

தெலுக்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள் நிஹாரிகா.தெலுங்கு வட்டாரத்தில் இவர் ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளினியாக தான் அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார்.
undefined
2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க மனசு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுகமானது 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான்.
undefined
அதன் பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்த நிஹாரிகாவிற்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இதையடுத்து நிஹாரிகாவிற்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.
undefined
நீண்ட மாப்பிள்ளை தேடும் படலத்திற்கு பிறகு நிஹாரிகாவுக்கும், குண்டூர் ஐஜியின் மகன் சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
undefined
இதையடுத்து கடந்த 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள உதய் நிவாஸ் அரண்மனையில் நிஹாரிகா, சைதன்யா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
undefined
இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவர் ஸ்டார் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண்,ல் வருண் தேஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.திருமணம் மற்றும் அதற்கு முன்னதாக நடைபெற்ற சடங்கு புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
undefined
திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக காதல் தம்பதி கிறிஸ்துமஸ் பண்டிகையை செம்ம ஹேப்பியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
undefined
அதுவும் புதுமணப் பெண்ணான நிஹாரிகா சிவப்பு நிற குட்டை உடையில் குதூகலமாக சிரிந்து காதல் கணவருடன் கொஞ்சி மகிழ்ந்த படி உள்ள போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது.
undefined
சைதன்யா - நிஹாரிகா இருவரும் மாறி மாறி தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் ரொமாண்டிக் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
எல்லாரும் திருமணத்திற்கு பிறகு படங்களில் கவர்ச்சி காட்டுவார்கள், ஆனால் நிஹாரிகாவோ போட்டோவில் கவர்ச்சியை அள்ளித் தெளிக்கிறார். அதுவும் கணவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
undefined
click me!