கிராமத்தில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய 3 இளம்பெண்கள்.. கல்லா கட்டிய தம்பதி கைது

By vinoth kumarFirst Published Mar 11, 2023, 1:34 PM IST
Highlights

வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

திருத்தணி அருகே பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க;- வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம்.. கல்லாகட்டிய அதிமுக பெண் முக்கிய நிர்வாகி கணவருடன் சிக்கினார்..!

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் கிராமத்தில் உள்ள கௌரியம்மன் தெருவில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் குருராஜபேட்டையில் உள்ள கார்த்திகேயபுரம் கிராமத்தில் உள்ள தனியார் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க;-  என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா.. உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. இளைஞர் செய்த செயல்

அப்போது, வீட்டிற்கு சம்பந்தம் இல்லாத வெளி மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த பெண்களிடம் விசாரணை நடத்திய போது வேலை தருவதாக கூறி வீட்டில் அடைத்து வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

இதனையடுத்து, ராமச்சந்திரன் மகன் முரளி (46). இவருடைய மனைவி பிரமிளா (41) ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கணவன், மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், மீட்கப்பட்ட 3 பெண்களையும் அவர்களின் சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கே  போலீசார் அனுப்பி வைத்தனர்.

click me!