மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. உள்ளே திறந்து பார்த்தால் அரைகுறை ஆடைகளுடன் 4 இளம்பெண்கள்.!

By vinoth kumarFirst Published Sep 20, 2022, 7:53 AM IST
Highlights

சென்னை மசாஜ் சென்டரில் இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 4 இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை மசாஜ் சென்டரில் இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 4 இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள பகுதியில் சிலர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை மயக்கி, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும், சிலர் வாடிக்கயைாளர்களை கட்டாயப்படுத்தி பணம் பறிப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு  போலீசார் ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மசாஜ் சென்டருக்கு வரும் வடிக்கையாளர்களிடம் வடமாநில இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மசாஜ் சென்டர் உரிமையாளர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த நிர்மல் ராஜ் (31) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வடமாநிலத்தை சேர்ந்த 4 இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!