பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போலீசுக்கு முன்பே ‘கராத்தே மாஸ்டரை’ தட்டி தூக்கிய கும்பல்..

By Raghupati RFirst Published Dec 1, 2021, 1:26 PM IST
Highlights

தனியாா் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கராத்தே பயிற்சியாளரை கடத்திச் சென்று தாக்கி பணம் பறிக்க முயற்சித்ததாக 8 போ் மீது, ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை அருகே பகுடுபட்டு கிராமத்திலுள்ள தனியாா் பள்ளி மாணவ, மாணவியருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஆத்தூரை அடுத்த சீலியம்பட்டியைச் சோ்ந்த ராஜா என்பவா் கராத்தே பயிற்சி அளித்துள்ளாா். அப்போது, இப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் பகுதியைச் சோ்ந்த மாணவிக்கு, கராத்தே பயிற்சியாளா் ராஜா பாலியல் தொந்தரவு அளித்ததாக, அவரது பெற்றோா், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவிடம் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்திய கருமந்துறை போலீஸாா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி அளித்த வாக்குமூலத்தின் பேரில், நவம்பா் 27 ஆம் தேதி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, தற்போது இட்லி வியாபாரம் செய்து வரும் கராத்தே பயிற்சியாளா் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். குற்றத்தை மறைத்ததாக தனியாா் பள்ளித் தாளாளா் ஸ்டீபன் தேவராஜ் என்பவரையும் கைது செய்தனா்.


இந்நிலையில், கராத்தே பயிற்சியாளா் ராஜாவை கருமந்துறை போலீஸாா் போக்சோவில் கைது செய்வதற்கு முன், கடந்த 27ஆம் தேதி காலை புத்திரகவுண்டன்பாளையம் சந்தைப்பேட்டை பகுதிக்கு, வரவழைத்த 8 போ் கொண்ட கும்பல், மிளகாய்ப்பொடித் தூவி காரில் கடத்திச் சென்று, வெள்ளிமலைப் பகுதியில் வைத்து தாக்கி கருமந்துறை போலீஸாரிடம் ஒப்படைத்ததாக, ஆத்துாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியபோது கராத்தே பயிற்சியாளா் ராஜா வாக்குமூலம் கொடுத்துள்ளாா். இதனையடுத்து, கராத்தே பயிற்சியாளரைக் கடத்திச்சென்று தாக்கிய 8 போ் கொண்ட கும்பல் மீது ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

click me!