என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா.. உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. இளைஞர் செய்த செயல்

By vinoth kumarFirst Published Jan 25, 2023, 3:18 PM IST
Highlights

திருச்சி பழைய பால்பண்ணை தனரத்தினம் நகர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் இளம்பெண்களை வைத்து ராஜேஷ் என்பவர் விபச்சாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சஞ்சீவி (21) என்ற இளைஞரிடம் ராஜேஷ் என்னிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும் உல்லாசத்திற்கு வருகிறாயே என அழைத்துள்ளார். 

திருச்சியில் சொகுசு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள புரோக்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

திருச்சி பழைய பால்பண்ணை தனரத்தினம் நகர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் இளம்பெண்களை வைத்து ராஜேஷ் என்பவர் விபச்சாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சஞ்சீவி (21) என்ற இளைஞரிடம் ராஜேஷ் என்னிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும் உல்லாசத்திற்கு வருகிறாயே என அழைத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத இளைஞர் இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கஸ்டமர் போல் வந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சொகுசு வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பாவி இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது உறுதியானது. இதனையடுத்து,  2 பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த புரோக்கர் ராஜேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- ரூ.5000 கொடுத்தால் போதும் இளம்பெண்களுடன் குஜாலாக இருக்கலாம்.. அழகிகளை வைத்து விபச்சாரம்.. சிக்கியது எப்படி?

click me!