எனது உள்ளாடைகளை அகற்றச் சொன்னார் !! ஜேம்ஸ் பாண்ட் பட தயாரிப்பாளர் மீது அதிரடி புகார் கூறிய பிரபல நடிகை …

By Selvanayagam PFirst Published Aug 21, 2018, 2:51 AM IST
Highlights

ஜேம்ஸ் பாண்ட் பட தயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி தவறான எண்ணத்துடன் படப்பிடிப்பில் என்னுடைய உள்ளாடைகளை அகற்றச் சொன்னார் என பிரபல நடிகை ரோஸ்மண்ட் பைக் அதிரடியாக புகார் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க  Me Too  என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் உலகம் முழுவதும் உள்ள நடிகைகள் மட்டுமல்லாமல் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிரபல நடிகை ரோஸ்மண்ட் பைக், ஜேம்ஸ் பாண்ட் பட தாயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி  மீது பாலியல் புகார்  தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு பியர்ஸ் பிராஸ்னன் நடிப்பில் வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் படமான டை அனதர் டே.  என்ற படத்தில் நடிகை ரோஸ்முண்ட் பைக் என்பவர் மிராண்டா ஃப்ரோஸ்டர் என்ற பாத்திரத்தில் நடித்தார்.

தயாரிப்பாளர் அந்த படத்தில் நடிக்கும் போது  தவறான என்னத்துடன் தனது உள்ளாடைகள்  அகற்றப்பட  வேண்டும் என கூறினார். ஆனால் நான் அதை  செய்ய மறுத்துவிடேன் என கூறி உள்ளார்.

என் முதல் தேர்வு ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்திற்காக இருந்தது. நான் என் ஆடைகளை இழந்து என் உள்ளாடைகளில் தோன்றும், காட்சியாக இருக்கும். 

ஆனால் உள்ளாடைகளை இழக்கக் கூடாது என்று என்  மனதில் தீர்மானம்  எடுத்துக் கொண்டேன் . பின்னர் பலத்த வலிமை கிடைத்தது எப்படி என்று எனக்கு தெரியாது,  ஆனால் நான் நினைத்தேன் 'அவர்கள் என் உள்ளாடை என்னை பார்க்க போகிறார்கள்  என்றால்,அவர்கள் எனக்கு வேலை கொடுக்கிறார்கள். என நான் நினைத்தேன்.

தயாரிப்பாளர்களால் நான்  கவர்ச்சியான ஆடை அணிய வேண்டும் என்று சொன்னார், மேலும் அதையும் கைவிட வேண்டும்  என கூறினார். மேலும் நாள் முழுவதும் அணிய 3 துண்டு துணிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் தயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி எப்படி நடந்தார் என்பது குறித்து   மீ டு இயக்கத்திற்கு முன்  நடிகை ரோஸ்மண்ட் பைக் வெளிப்படுத்தி உள்ளார்.

click me!