What trees are used for what? You can read this ..

எந்தெந்த மரங்கள் எதுக்கெல்லாம் பயன்படுகிறது...

** விறகிற்கு

சீமைக்கருவேல், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல். 

** கட்டுமான பொருட்கள்

கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பூவரசு, வாகை, பிள்ளமருது, வேங்கை, விடத்தி. 

** கோடை நிழலுக்கு 

வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். 

** பசுந்தழை உரத்திற்கு

புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு. 

** கால்நடைத் தீவனத்திற்கு

ஆச்சா, சூபாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல். 

** மருந்து பொருட்களுக்கு

கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் 

** பஞ்சிற்கு

காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பூர் இலவு 

** தீப்பெட்டித் தொழிலுக்கு

பீமரம், பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு. 

** எண்ணெய்க்காக

வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலுவம் 

** காகிதம் தயாரிக்க

ஆனைப்புளி, மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல் 

** தோல்பதனிடவும், மை தயாரிக்கவும்

வாட்டில், கடுக்காய், திவி – திவி, தானிக்காய் 

** நார் எடுக்க

பனை, ஆனைப்புளி 

** பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த

வேம்பு, புங்கம், ராம்சீதா, தங்க அரளி 

** கோயில்களில் நட

வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சளரளி, நொச்சி, அரசு 

** குளக்கரையில் நட

மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை 

** பள்ளிகளில் வளர்க்க

நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல் 

** மேய்ச்சல் நிலங்களில் நட

கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல், தூங்குமூஞ்சி

** சாலை ஓரங்களில் நட

புளி, வாகை, செம்மரம், ஆல், அத்தி, அரசு, மாவிலங்கு