Asianet News TamilAsianet News Tamil

மண் உழவு முதல் வெங்காய அறுவடை வரை ஒரு அலசல்…

An analysis of the soil tillage until the onion harvest
an analysis-of-the-soil-tillage-until-the-onion-harvest
Author
First Published Apr 19, 2017, 11:52 AM IST


உழவு:

புழுதிபட உழவு செய்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி பத்து டன் மக்கிய தொழு உரத்தைக் கடைசி உழவில் சேர்த்து உழ வேண்டும்.

நடவு:

பிறகு 45 வயதுடைய நாற்றுக்களைப் பறித்து 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் பராமரிப்பு:

பயிர் நட்ட மூன்றாவது நாளும், மண்ணின் தன்மைக்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும்.

களையைக் கட்டுப்படுத்த:

பென்டிமெத்திலின் களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீரில் 5 மி.லி என்ற அளவில் நாற்று நடுவதற்கு இரு நாட்கள் முன்பே தெளிப்பதால் நடவு செய்து ஒரு மாதம் வரை களையைக் கட்டுப்படுத்த முடியும்.

களை எடுத்தல்:

பின்னர், ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறைக் கைக்கொத்தைக் கொண்டு களை எடுக்க வேண்டும்.

உரம்:

பின்னர் மேலுரமாக ஒரு மூட்டை யூரியா, இரு மூட்டை 10:26:26 காம்ப்ளக்ஸ் உரத்தை நடவு செய்த முப்பதாவது நாள் களை எடுத்த பின்பு அளிக்க வேண்டும்.

அறுபதாவது நாள் மேலும் ஒரு களை எடுத்து ஒரு மூட்டை யூரியா, இரு மூட்டை பொட்டாஷ் அளிக்க வேண்டும்.

மண்ணின் ஈரம்:

வெங்காயம் பருமனடையும் பருவத்தில் மண்ணின் ஈரம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாதிப்பு:

இந்த பருவத்தில் வறட்சி ஏற்பட்டால், வெங்காயம் குமிழ் பிடிப்பதும், பெருப்பதும் பாதிக்கப்படும்.

நீர்ப்பாசனம்:

நடவிலிருந்து அறுவடை வரை சராசரியாக 18-20 முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios