Asianet News TamilAsianet News Tamil

அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகைகள் பறிப்பு - மர்ம பெண்ணுக்கு வலைவீச்சு...!

The police are searching for a 70-year-old lady who has bought 4 shaving jewels by CCTV.
The police are searching for a 70-year-old lady who has bought 4 shaving jewels by CCTV.
Author
First Published Nov 23, 2017, 9:36 PM IST


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், 70 வயது மூதாட்டியிடம் 4 சவரன் நகைகளை வாங்கிச் சென்ற பெண்ணை சிசிடிவி மூலம் கண்டறிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் குரண்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள், கடந்த திங்களன்று காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதையடுத்து அந்த மூதாட்டி, பெண் ஒருவர் மருத்துவமனையில் தனக்கு உதவுவதாக கூறி மயக்கப்பொடி தூவி, தண்டட்டி, மூக்குத்தி உள்ளிட்ட 4 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக காரியாபட்டி போலீசில் புகார் அளித்தார். 

இதைதொடர்ந்து போலீசா வழக்கு பதிவு செய்து மருத்துவமனையின் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

இதில், பெண் ஒருவர் மூதாட்டிக்கு வழிகாட்டியது, நகைகளை வாங்கியது ஆகிய காட்சிகள் பதிவாகியிருந்தன. 

கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு, நகைகளை வாங்கிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios