நள்ளிரவில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த கார் குட்டைக்குள் பாய்ந்ததில் ஒருவர் பலி; நால்வர் காயம்…
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் குட்டையில் பாய்ந்ததில் ஒருவர் பலியானார். உடன் வந்த நால்வரு பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரைச் சேர்ந்தவர் அன்வர்பாட்ஷா (55). இவர் தனது உறவினர்கள் நால்வருடன் நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் மன்னார்குடி சென்றுவிட்டு கும்பகோணத்திற்கு திரும்பி வந்துக்கொண்டு இருந்தார்.
நள்ளிரவு 12 மணியளவில் நீடாமங்கலம் மன்னார்குடி சாலையில் தட்டித் தெரு என்ற இடத்தில் கார் வந்தபோது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் இடதுபுறம் உள்ள குட்டையில் கார் தலைகுப்புற பாய்ந்தது.
இதில் காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்து வெளியே வரமுடியாமல் அலறி உள்ளனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் அதனைப் பார்த்து காவலாளர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு அவர்களை மீட்கும் பணியில் இறங்கினர்.
இதுகுறித்து தகவலறிந்தது வந்த நீடாமங்கலம் காவலாளார்கள் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் காரில் சிக்கி இருந்த ஐவரையும் மீட்டனர். இதில், அன்வர்பாட்ஷா மட்டும் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவலாளர்கள் படுகாயம் அடைந்த நால்வரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், அன்வர் பாட்ஷாவின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.