Asianet News TamilAsianet News Tamil

பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்து விஷம் குடித்த காதலர்கள்…

Lovers who poison the fear that the parents will divide themselves ...
Lovers who poison the fear that the parents will divide themselves ...
Author
First Published Nov 6, 2017, 8:06 AM IST


சேலம்

சேலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்து காதலர்கள் விஷம் குடித்தனர். இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மோளாண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஓமலூர் அருகேவுள்ள தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் மினி பேருந்தில் ஓமலூருக்கு வந்து பயிற்சி நிறுவனத்திற்கு செல்வது வழக்கம்.

சேலம் திருவாக்கௌண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (23), லாரி கிளினர். இவர் ஓமலூர் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க அடிக்கடி வருவார்.

இந்த நிலையில் ஓமலூருக்கு வந்து சென்றபோது, சரவணக்குமாருக்கும், அனிதாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் காதலித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதல் விவகாரம் தெரிந்து இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்று பயந்து இருவரும் கடந்த 2-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர்.

பின்னர், அவர்கள் ஆத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் உதவியுடன் அங்கு தங்கினர். இதனிடையே தன்னுடைய மகள் மாயமானது குறித்து அனிதாவின் தந்தை ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியபோது, காதலர்கள் ஆத்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனே விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்டு காவலாளர்கள் காதலர்கள்யிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் மாலையில் காவல் நிலையத்திற்கு வருவதாக கூறி உள்ளனர்.

பின்னர் அந்த காதலர்கள்யினர் தங்கள் நண்பர்களிடம் காவல் நிலையத்திற்கு செல்ல உள்ளதாகவும், ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வருமாறும் கூறிவுள்ளனர்.

மாலையில் பேருந்து நிலையத்திற்கு வந்த காதலர்கள் ஒரு வேளை காவல் நிலையத்தில் தங்களை பிரித்து விடுவார்களோ? என பயந்து, ஆத்தூரில் உள்ள ஒரு கடையில் விஷ மருந்தை வாங்கி அதை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர்.

இதனிடையே அங்கு வந்த நண்பர்களுடன், ஆத்தூரில் இருந்து ஓமலூருக்கு பேருந்தில் அவர்கள் புறப்பட்டு வந்தனர். அங்கு வந்து இறங்கிய சிறிது நேரத்தில் காதலர்கள்யினர் மயக்கம்போட்டு கீழே விழுந்தனர்.

அப்போதுதான் அவர்கள் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனே அனிதாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதே நேரத்தில் சரவணக்குமார் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios