Asianet News TamilAsianet News Tamil

"என் கொழுந்தன் இல்லாம எனக்கு வாழ்க்கை இல்ல" .. - கள்ளகாதலால் கணவரின் தம்பியோடு தற்கொலை செய்து கொண்ட பெண் ..

அண்ணியும் கொழுந்தனும் கொண்ட கள்ளக்காதல் உறவால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டனர் .

lady attempted suicide with her husbands brother
Author
Tamil Nadu, First Published Aug 15, 2019, 6:31 PM IST

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது மனைவி அகிலா. சுரேஷின் வீட்டிற்கு அவரது சித்தப்பா மகன் ஐயப்பன் அடிக்கடி வந்து போவாராம் . சுரேஷிற்கு தேவையான உதவிகளை ஐயப்பன் செய்து கொடுத்து வந்தாராம் . ஒரு கட்டத்தில் சுரேஷ் இல்லாத நேரங்களிலும் ஐயப்பன் வர தொடங்கியுள்ளார் . அதனால் அகிலாவிற்கும் ஐயப்பனுக்கு நெருக்கம் ஏற்பட்டது . 

lady attempted suicide with her husbands brother

அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது .இதை அறிந்த சுரேஷ் , இருவரையும் கண்டித்துள்ளார் . இதனால் கடந்த மே மாதம் இருவரும் ஊரை விட்டு ஓடி உள்ளனர் .

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் மீண்டும்  ஊருக்கு வந்துள்ளனர் . அப்போது குடும்பத்தினர் இருவரையும் பிரிந்து போக கூறியதாக தெரிகிறது .

lady attempted suicide with her husbands brother

இதனால் ஒன்றாக சேர்ந்து இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர் . அதன்படி ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கும் ஏரி பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர் .

இதுகுறித்து அனைகாவூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Follow Us:
Download App:
  • android
  • ios