Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்து- இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்... ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த 3 பேர் இளைஞர்கள்..!

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

krishnagiri government bus accident... 3 people killed
Author
Tamil Nadu, First Published Sep 16, 2019, 5:59 PM IST

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமேஷ்வரன். இவர் இரண்டு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சோமேஷ்வரன் வேகமாக சென்றுள்ளார். 

krishnagiri government bus accident... 3 people killed

அந்த நேரத்தில் எதிர்திசையில் கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூரை நோக்கி வந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேராக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் பயணித்த சோமேஷ்வரனும், அவரது இரண்டு நண்பர்களும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

krishnagiri government bus accident... 3 people killed

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios