Asianet News TamilAsianet News Tamil

ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வா மகனே... ஒரே ஒரு மன்றாட்டு உசுரோட வா மகனே" சுர்ஜித்துக்கு வைரமுத்து கவிதை...!!

தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் அவனை மீட்க சுமார் 70 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சிறுவனுக்காக நெஞ்சை உருக்கும் கவிதை ஒன்றை எழுதி உள்ளார் அது:- 
 

kaviger vairamuthu poem for chil surjith
Author
Chennai, First Published Oct 28, 2019, 6:07 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் இரண்டு வயது சிறுவன் சுர்ஜித் ஆள்துளை கிணற்றில் விழுந்தான்,  கடந்த 25-10-2019 அன்று மாலை 5:30 மணிக்கு விழுந்த சுர்ஜித் தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் அவனை மீட்க சுமார் 70 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சிறுவனுக்காக நெஞ்சை உருக்கும் கவிதை ஒன்றை எழுதி உள்ளார் அது:- 

சோளக் கொல்லையில
 சொல்லாமப் போனவனே 
மீளவழி இல்லாம 
நீளவழி போனவனே. 

கருக்குழியிலிருந்து
 கண்தொறந்து வந்ததுபோல் 
எருக்குழியிலிருந்து
 எந்திரிச்சு வந்திரப்பா

 ஊர்ஒலகம் காத்திருக்கு
 உறவாட வா மகனே 
ஒரே ஒரு மன்றாட்டு
 உசுரோட வா மகனே"

 என , குழந்தை சுஜித் மீண்டு வர வைரமுத்து இவ்வாறு கவிதை எழுதிள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios