Asianet News TamilAsianet News Tamil

உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ..! கொட்டித் தீர்க்க போகும் கனமழை..!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

heavy rain for tamilnadu
Author
Tamil Nadu, First Published Oct 22, 2019, 10:57 AM IST

தமிழகத்தில் கடந்த 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களில் பருவமழை தீவிரமடையும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

heavy rain for tamilnadu

தென்மேற்கு-மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வடதமிழகம், தெற்கு ஆந்திராவையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain for tamilnadu

ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன்காரணமாக அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியான ஆந்திராவில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios