சென்னை மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்..! முக்கிய ரயில்கள் ரத்து..!
சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைத்து வருவது மின்சார ரயில் சேவை தான். இவை சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயிலாக செயல்பட்டு வருகிறது. அதே போல செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற இடங்களில் இருந்தும் சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாளை (29-ம் தேதி) காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரையில் தண்டவாள பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன.இதனால், மேற்கண்ட நேரங் களில் மின்சார ரயில்களின் சேவை இருமார்க்கத்திலும் நிறுத் தப்படுகிறது. மொத்தம் 36 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், சென்னை கடற்கரை யில் இருந்து வேளச்சேரிக்கு மதியம் 2 மணிக்கும், வேளச் சேரியில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கும் முதல் ரயில்சேவை புறப்படும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல சென்னை எழும்பூர், தாம்பரம் யார்டில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் , சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.