தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: சண்டிகருக்கு மரண அடி கொடுத்த மே.வங்க அணி...
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் சண்டீகர் அணிக்கு மரண அடி கொடுத்தது மேற்கு வங்க அணி.
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்-68 போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மேற்கு வங்கம் 90-62 என்ற புள்ளிகள் கணக்கில் சண்டீகரை வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 75-57 என்ற கணக்கில் அஸ்ஸாமையும், ராஜஸ்தானை 37-78 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லியும் வீழ்த்தியது.
நடப்புச் சாம்பியனான கேரளம் 62-34 என்ற கணக்கில் மத்தியப் பிரதேசத்தையும், மகாராஷ்டிர அணி 76-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானா அணியையும் வீழ்த்தியது.
ஆடவர் பிரிவு ஆட்டங்களில் கேரளம் 84-66 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தியது. கேரள வீரர்கள் ஜினி பென்னி, ஸ்ரீராக் நாயர் தலா 18 புள்ளிகள் எடுத்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் குஜராத் 94-65 என்ற கணக்கில் ஹரியாணாவை வென்றது. குஜராத் வீரர் காசி ராஜன் 26 புள்ளிகளை கைப்பற்றினார்.
மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தானை 77-55 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது உத்தரகண்ட்.