மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த ஆடவர், மகளிர் சாம்பியன் வென்று அசத்தல்...
மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், சகநாட்டவரான அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் ஆகினர்.
மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆடவர் பிரிவில் சாலமன் டெக்சிசா பந்தய இலக்கான 42 கிலோ மீட்டரை 2 மணி 9 நிமிடம் 34 நொடிகளில் எட்டி முதலிடம் பிடித்தார்.
சகநாட்டவரான ஷுமெட் அகல்னா 2 மணி 8 நிமிடம் 35 நொடிகளில் வந்து 2-ஆம் இடமும், கென்யாவைச் சேர்ந்த ஜோஷுவா கிப்கோரிர் 2 மணி 10 நிமிடம் 30 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.
அதேபோன்று மகளிர் பிரிவில் அமானே கொபேனா 2 மணி 25 நிமிடம் 49 நொடிகளில் முதல் வீராங்கனையாக வந்தார்.
கென்யாவின் போர்னஸ் கிடுர் 2 மணி 28 நிமிடம் 48 நொடிகளில் வந்து 2-ஆம் இடமும், எத்தியோபியாவின் ஷுமோ ஜினிமோ 2 மணி 29 நிமிடம் 41 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.
இரண்டு பிரிவுகளிலும் வெற்றியாளர்களுக்கு தலா ரூ.26 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் பங்கேற்ற இந்தியர்களான கோபி தொனகல், நிதேந்திர சிங் ராவ் ஆகியோர் முறையே 11, 12-ஆவது இடங்களைப் பிடித்தனர்.