Asianet News TamilAsianet News Tamil

கோபா டெல் ரே கால்பந்து கோப்பையை 30-வது முறையாக வென்றது பார்சிலோனா...

Barcelona won the Copa del Rey football trophy for 30th time
Barcelona won the Copa del Rey football trophy for 30th time
Author
First Published Apr 23, 2018, 10:19 AM IST


கோபா டெல் ரே கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா 5-0 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தி சாம்பியன் வென்றது. 

கோபா டெல் ரே கால்பந்து போட்டி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்று நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணி சார்பில் லூயிஸ் செளரெஸ் 2 கோல்களும், லயோனல் மெஸ்ஸி, ஆன்ட்ரியாஸ் இனியெஸ்டா, பிலிப் கட்டின்ஹோ தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் கோல் கணக்கை செளரெஸ் தொடங்கினார். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் அவர் கோலடிக்க, 31-வது நிமிடத்தில் மெஸ்ஸி பங்களிப்பில் அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்ந்தது.
 
செவில்லா தனது முதல் கோலுக்கு முயற்சித்து வந்த நிலையில், பார்சிலோனா தனது 3-வது கோலை எட்டியது. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் செளரெஸ் மீண்டும் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவிலேயே பார்சிலோனா 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் பார்சிலோனாவின் கையே ஓங்கியிருக்க, ஆன்ட்ரியாஸ் இனியெஸ்டா 52-வது நிமிடத்தில் கோலடித்தார். தொடர்ந்து 69வது நிமிடத்தில் ஃபிலிப் கட்டின்ஹோ பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த, 5 கோல்களை எட்டியது பார்சிலோனா.

அந்த அணியின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாத செவில்லா ஒரு கோல் கூட அடிக்காததால், இறுதியில் பார்சிலோனா 5-0 என்ற கணக்கில் வென்றது.
 
கோபா டெல் ரே கோப்பையை பார்சிலோனா கைப்பற்றுவது இது 30-வது முறையாகும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios