12-வது சாஃப் கால்பந்து போட்டி - பி பிரிவில் இடம் பெற்றத் இந்தியா...
12-வது தெற்காசிய கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டியில் இந்தியா குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தெற்காசிய கால்பந்து கோப்பை (சாஃப்) வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 4 முதல் 15-ஆம் தேதி வரை சாஃப் கோப்பை கால்பந்து போட்டி மூன்றாவது முறையாக வங்கதேசத்தில் நடக்கிறது.
குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், பூடான் நாடுகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
ஏழு முறை சாம்பியனான இந்தியா கடந்த 2015-ல் நடந்த இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்று கோப்பையை கைப்பற்றியது.
டாக்காவில் உள்ள நேஷனல் விளையாட்டரங்கில் அனைத்துப் போட்டிகளும் நடக்கின்றன.
தற்போது 12-வது சாஃப் கால்பந்து கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.