Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிசாமியின் எதிர்காலம்...? தி.மு.க. எம்.பி.யின் எச்சரிக்கை..!

ஸ்டாலினை பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை! என்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நீங்கள்  நினைவில் கொள்ள வேண்டும். அது உங்களுக்கும் நல்லது, உங்கள் எதிர்காலத்துக்கும் நல்லது.-டி.ஆர்.பாலு (தி.மு.க. எம்.பி.)

The future of Edappaadi Palanisamy will be  Dmk M.P's  alert
Author
Tamil Nadu, First Published Oct 1, 2019, 6:18 PM IST

* பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின உரையில், தமிழ் மொழியை உச்சரித்துள்ளார். ஐ.நா.சபையில் பேசும் போது, தமிழ் மொழியில் பேசியுள்ளார். ஆர் தமிழுக்கு எவ்வளவு சிறப்பு கொடுக்கிறார்! என்பதை இதன் வாயிலாக உணர முடியும். -    ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

* தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தி.மு.க. இருபத்தைந்து கோடி ரூபாய் வழங்கியதாக தகவல் வருகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். - பிரேமலதா (தே.மு.தி.க. பொருளாளர்)

* ஸ்டாலினை பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை! என்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நீங்கள்  நினைவில் கொள்ள வேண்டும். அது உங்களுக்கும் நல்லது, உங்கள் எதிர்காலத்துக்கும் நல்லது.-டி.ஆர்.பாலு (தி.மு.க. எம்.பி.)

* சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பெருமை பற்றிப் பேசியதை வரவேற்கிறோம். அதே வேளையில் ‘தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு என்பதே இல்லை! ஹிந்தியை திணிக்க மாட்டோம்!’ என உறுதியளிக்க வேண்டும். அதுதான் சிறப்பாக இருக்கும். 
- டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க. செய்தித் தொடர்பாளர்)

* அரசியல் தலைவர்களின் கலவையாக இருக்க விரும்புகிறேன். துணிச்சலில் ஜெ., போலவும், தமிழ் உணர்வில் கருணாநிதி போலவும், சமுதாய அக்கறையில் ராமதாஸ் போலவும், எளிமையில் விஜயகாந்த் போலவும், பேச்சாற்றலில் வைகோ போலவும் இருக்க விரும்புகிறேன். -தமிழிசை (தெலுங்கானா கவர்னர்)

* டி.என்.பி.எஸ்.சி. பற்றியெல்லாம் கருத்து கூற முடியாது. ஏனென்றால் அது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதன் நிர்வாகத்தில் அரசு தலையிட்டால் ‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அரசு தலையிடுகிறது’ என சொல்லிவிடுவார்கள். கொடுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டே டி.என்.பி.எஸ்.சி. செயல்படுகிறது. - எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

* குடிமராமத்து பணிகளை நேர்மையுடன் செய்து வந்த பொதுப்பணித்துறை கூடுதல் சிறப்பு செயலர் பாலாஜி, திடீரென மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுவிட்டார். நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய பணி பாதுகாப்பு தமிழகத்தில் வழங்கப்பட வேண்டும். 
- பி.ஆர். பாண்டியன் (தமிழக, காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்)

* கால நிலை மாற்றத்தால் கடலோர நகரங்கள் அடுத்த 40 ஆண்டுகளில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும். குறிப்பாக சென்னை, கொச்சி போன்ற நகரங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும், புதிய நோய்கள் வரும். பொருளாதார வீழ்ச்சி ஏற்படும், மனிதர்கள் அழிவும் நேரும். - அன்புமணி ராமதாஸ் (ராஜ்யசபா எம்.பி.)

* பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பானது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.பிரதமர் மோடி தன் சொந்த விளம்பரத்திலேயே கவனமாக இருந்தார். அமெரிக்காவுடனான பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியின் சந்திப்பில் எந்த வித முன்னேற்றமுமில்லை. 
- ஆனந்த் சர்மா (காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்)

* நான் எல்லோரிடமும் கனிவாக பேசுவேன். ஆனால் பொன்முடியின் தொனி வேறு மாதிரி இருக்கும். அப்படிப் பேசினால்தான் நிர்வாகிகள் வேலை செய்வார்கள். அந்த தொனியில் பொன்முடி பேசுவதால் சிலர் அதை அடாவடி என சொல்லியிருப்பார்கள். -மஸ்தான் (தி.மு.க. எம்.எல்.ஏ.)

Follow Us:
Download App:
  • android
  • ios