Asianet News TamilAsianet News Tamil

விஜய்யால் சர்காரை அசைத்துப் பார்க்க முடியும்!! சர்கார் வில்லன் பழ. கருப்பையா பளீர் பேட்டி...

சர்கார் திரைப்படம் ஒரு பக்கம் வசூலில் பட்டையை கிளப்பினாலும், இன்னொரு பக்கம் சர்ச்சைக்குள் சிக்கி தற்போது சென்சாரில் சில பல காட்சிகளையும் இழந்திருக்கிறது. 

Pala.Karupaiya Exclusive about Sarkar
Author
Chennai, First Published Nov 9, 2018, 6:57 PM IST

சர்கார் திரைப்படம் ஒரு பக்கம் வசூலில் பட்டையை கிளப்பினாலும், இன்னொரு பக்கம் சர்ச்சைக்குள் சிக்கி தற்போது சென்சாரில் சில பல காட்சிகளையும் இழந்திருக்கிறது. ஆளும் கட்சியை நேருக்கு நேர் தில்லாக விமர்சித்திருக்கும் சர்கார் படத்தின் காட்சிகளை, அதிமுக அரசு என்ன தான் அவரசர கூட்டம் போட்டு சென்சார் செய்திருந்தாலும், அந்த காட்சிகள் இதுவரை ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

சர்கார் பிரச்சனை இப்படியாக போய்க்கொண்டிருக்கையில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் மூத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு அதிரடியான  பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். 

அந்த பேட்டியின் போது ஏ.ஆர். முருகதாஸ் மிகழ்கால அரசியலை தோலுரித்து காட்டி இருக்கிறார். அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் இவர்கள். அதை அப்படியே காட்டி இருக்கிறார் முருகதாஸ். .   விஜயும் அந்த கதாப்பாத்திரத்தினை உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார்.

Pala.Karupaiya Exclusive about Sarkar

இப்போதெல்லாம் யோக்கியர்கள் யாரையுமே மந்திரி சபையில் பார்க்க முடிவதில்லை. கடந்த 25 ஆண்டுகளில் பொதுநலனோடு பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் குறைந்துவிட்டார்கள். அதிலும் கடந்த 10 ஆண்டுகள் மிகவும் மோசமானதாக தான் இருக்கிறது. 

அரசியலுக்கு வருவெதே பணக்காரனாக அவதற்கு தான் என்ற எண்ணம் நிலவுகிறது. ஒரு பால்காரனாக அரசியலுக்குள் நுழைபவர் எப்படி பணக்காரனாக வெளியேறுகிறார் என்பது தெரியவில்லை. கோடிக்கணக்கான சொத்தை எப்படி இவர்கள் சம்பாதிக்கின்றனர் என்பது கேள்விக்குறி தான். இது போன்ற யதார்த்தங்களை இந்த படத்தில் முருகதாஸ் போட்டுடைத்திருப்பது தான் பலருக்கு உறுத்தலாகி இருக்கிறது. அதிலும் முதல்வரின் மகள் என்பதற்காக இடுப்புவரை குனிந்து கும்பிடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இவர்களை வெகுவாக பாதித்திருக்க வேண்டும். இதனால் தான் சர்காரை எதிர்க்கின்றனர்.

Pala.Karupaiya Exclusive about Sarkar

விஜய் நிஜமாகவே மாஸ் தான். ஜெயலலிதா இப்போது உயிரோடு இருந்தால் கூட விஜய்க்கு இருக்கும் இந்த செல்வாக்கை அசைத்திருக்க முடியாது. எந்த அரசியல் செல்வாக்கும் இல்லாமல் ஒரு நடிகனாக இருக்கும் போதே விஜய்க்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் விஜய் நிஜமாகவே கிரேட் தான்.

அவர் மீது மக்களுக்கு பெரிய அளவிலான கிரேஸ் இருக்கிறது. அவருக்காக எதையும் செய்யும் இளைஞர் கூட்டம் இருக்கிறது. அவருக்கு இருக்கும் இந்த செல்வாக்கை வைத்து அரசையே  அசைத்து பார்க்க முடியும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில்  அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். பழ. கருப்பையா.

Follow Us:
Download App:
  • android
  • ios