Asianet News TamilAsianet News Tamil

கட்சியிலிருந்து விலகிய பாமக முக்கியத் தலைவர்... அதிர்ச்சியில் ராமதாஸ்..!

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியின் துனைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். 

one more administrator withdrew of PMK
Author
Tamil Nadu, First Published Apr 10, 2019, 11:40 AM IST

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியின் துனைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

 one more administrator withdrew of PMK

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’ அதிமுக - பாமக பேரக் கூட்டணி. முதல்வரை மோசமாக திட்டிவிட்டு இறுதியில் அவருடனே கூட்டணி வைத்துள்ளனர். அதிமுக திமுகவுடன் இனி எப்போதுமே கூட்டணி அமைக்க மாட்டேன் என கூறிவிட்டு இப்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.one more administrator withdrew of PMK

ஆகையால் பாமகவில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்தார். ஈரோடு பகுதியைச் சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன், கொங்குவேலார் சமூகத்தை சேர்ந்தவர். முன்பு கொங்கு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த இவர் பாமகவின் துணைத் தலைவராக உள்ளார். one more administrator withdrew of PMK

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததை எதிர்த்து பாமகவில் இருந்து துணைத்தலைவராக பொறுப்பு வகித்த நடிகர் ரஞ்சித் கட்சியை விட்டு விலகினார். அடுத்து அக்கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரி வெளியேறினார். இப்போது பொங்கலூர் மணிகண்டன் வெளியேறி உள்ளார். இதனால் பாமக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios