Asianet News TamilAsianet News Tamil

முரசொலி பஞ்சமி நிலம்... திமுகவுக்கு நோட்டீஸ்... வெறுப்பில் ராமதாஸை விளாசும் மு.க.ஸ்டாலின்..!

மருத்துவர் ராமதாசின் கைப்பாவையாக மாறியிருக்கும் டாக்டர் சீனிவாசனுக்கு தி.மு.க தலைவர், மு.க.ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Murasoli Panchami land ... Notice to DMK
Author
Tamil Nadu, First Published Oct 23, 2019, 4:55 PM IST

பஞ்சமி நிலங்கள் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் அளித்த புகார் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Murasoli Panchami land ... Notice to DMK

இந்நிலையில் இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’பொய்மையையே மூலதனமாக வைத்து, அரசியல் வியாபாரம் நடத்தி வரும் மருத்துவர் அய்யா ராமதாஸ், திடீரென கற்பனையான ஒரு ஆராய்ச்சி நடத்தி, தற்போது முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என ஒரு செய்தி வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:- ஒரே ஒரு ட்விட்... சாதாரண ஜவுளிக்கடைக்காரரை லட்சாதிபதியாக்கிய ஹெச்.ராஜா..!

அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம் என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டு, அது பஞ்சமி நிலமென்பதை மருத்துவர் அய்யா நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். அப்படி நிரூபிக்காவிடில் மருத்துவர் ராமதாஸ் அவர்களும், அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என நான் அறைகூவல் விடுத்திருந்தேன்.

அதனை ஏற்றிட முன்வராத மருத்துவர், முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல், விவகாரத்தைத் திசை திருப்ப முயன்று, மூலப்பத்திரத்தை வெளியிடவில்லை; பட்டாவை மட்டும் வெளியிட்டுள்ளனர் என்று அறிக்கை விட்டார்.Murasoli Panchami land ... Notice to DMK

மருத்துவர் இராமதாஸ் நான் விடுத்த அறைகூவலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வாய் மூடி மவுனமானார். இப்போது, ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாரதிய ஜனதாவின் மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனு தந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து, அது செய்தியாக ஊடகங்களில் வருகிறது. மருத்துவர் ராமதாஸ் கூற்றை நம்பி, மண் குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கியுள்ளார் சீனிவாசன். அவருக்காக அனுதாபப்படுகிறேன். மருத்துவர் ராமதாசின் கைப்பாவையாக செயல்படத் தொடங்கியுள்ள சீனிவாசனுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

துளி கூட உண்மையில்லா, ஜமுக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய் குறித்து ஆதி திராவிடர் தேசிய ஆணையத்துக்குச் சென்று, நேரத்தை வீணடிப்பதைவிட, அவர் இப்போது கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.கவின் முன்னாள் தலைவி ஜெயலலிதாவினால், பையனூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் மருத்துவர் அய்யாவுடன் இணைந்து செயல்பட்டால் ஏதாவது பலனாவது கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.Murasoli Panchami land ... Notice to DMK

இப்போதும் காலம் கடந்து விடவில்லை; மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நான் ஏற்கனவே விடுத்த அறைகூவலை இப்போதும் வலியுறுத்துகிறேன். முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, மருத்துவர் ராமதாஸ் முன்வருவாரா? அவரது கைப்பாவையாகச் செயல்படும் சீனிவாசன், ராமதாஸை வலியுறுத்த முன்வருவாரா?'' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்:- உங்கள் அக்கவுண்டில் தீபாவளிக்கு ரூ.2000 டெபாசிட்... பழைய பாக்கியை செட்டில்மெண்ட் செய்யும் எடப்பாடி..!

Follow Us:
Download App:
  • android
  • ios