அதிமுக வேட்பாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இறங்கி அடிக்கும் அமைச்சர்கள்..!
விக்கிரவாண்டி தொகுதியில் ஒயிலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மக்களுக்கு நினைவு படுத்தும் விதமாகவும், கலைகளை போற்றும் விதமாகவும் ஒயிலாட்டம் ஆடி வாக்குகளைச் சேகரித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது
"
அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரு சக்கர வாகனதில் பின்னர் புறம் அமர்ந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றார் அப்போது அந்த வழியக்காக மிதிவண்டியில் விவசாயி ஒருவர் சென்றுகொண்டு இருக்க அவருடன் பேசி உரையாடிக் கொண்டு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
"
ஆனால் எந்த தொகுதி வேட்பாளர்க்கும் இதுபோன்று வாக்கு சேகரிப்பில் அமைச்சர்கள் ஈடுபடவில்லை.. விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறப்படுகிறது