பாகிஸ்தான் பயங்கர சதி..!! இந்தியாவிற்குள் நுழைந்த தீவிரவாதிகள்...!! அடித்து தூக்கியது பாதுகாப்பு படை..!!
அதில் இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை ஏற்பட்டது, அதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் மூவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள், கைப்பற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் ட்ரால் பகுதியில் திடீரென பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்திய ராணுவ துருப்புகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
காஷ்மீர் எல்லையில் பொது மக்களில் இருவர் உயிரிழந்தனர். சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இதனை அடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டுவந்த மூன்று தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன, அதிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்தது. மேலும் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் இரணுவத்தினர் 10 பேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனையடுத்து எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று மாலை காஷ்மீர் எல்லையான ட்ரால் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது திடீரென பயங்கரவாதிகள்துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் பாதுகாப்புப் படையினர் அப்பயங்கரவாதிகளை சுற்றுவளைத்து சுட்டனர், அதில் இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை ஏற்பட்டது, அதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் மூவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள், கைப்பற்றப்பட்டது. மேலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று பகுதியில் வேறு ஏதேனும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.