Asianet News TamilAsianet News Tamil

தீமையைத் தோற்கடிக்க ஒன்று கூடுங்கள்... ஆர்.எஸ்.எஸ் விழாவில் ஹெச் சி எல் ஷிவ் நாடார் சூளுரை..!

அனைவரும் நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்க உதவ வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார் பேசினார்.

All stakeholders should help overcome nations problems
Author
Delhi, First Published Oct 8, 2019, 12:00 PM IST

மராட்டிய மாநிலம்  நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தியது.  இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி மற்றும் வி.கே. சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எச்.சி.எல். நிறுவனர் சிவ  நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை சேர்ந்த தொண்டர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  அவர்கள் தலைவர்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.All stakeholders should help overcome nations problems

விழாவில் பேசிய எச்.சி.எல். நிறுவனர் சிவ  நாடார், ‘நாடு பல சவால்களை எதிர்கொள்கிறது, ஆனால், அரசாங்கத்தால் மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இந்த சவால்களை சமாளிக்க தனியார் துறை, குடிமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்காற்ற வேண்டும். ராவணன் மீது ராமரின் வெற்றியை தசராவாக கொண்டாடுகிறோம். அதர்மத்தின் மீது தர்மம்... தீமைக்கு எதிராக  நன்மை. உள்ளேயும் வெளியேயும் தீமையைத் தோற்கடிப்பதற்கான தொடர்ச்சியான போராட்டம் இது.All stakeholders should help overcome nations problems

இன்று உங்களுடன் பேசவும், கொண்டாட்டங்களில் பங்கெடுக்கவும்  அழைக்கப்படுவது எனக்கு மரியாதை மற்றும் எனக்கு பாக்கியம் ஆகும்.  அனைத்து ஆர்.எஸ்.எஸ் தொழிலாளர்களின் ஆற்றலுடனும் இன்று ரெஷிம்பாக் மைதானம் உண்மையிலேயே உயிரோட்டமாக உள்ளது என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios