முகப்பருக்கு ஒரே வாரத்தில் தீர்வு..! பருவும் வராது வடுவும் தெரியாது..!
நம் வீட்டில் உள்ள உப்பை பயன்படுத்தி முகப்பரு வராமல் தடுக்க முடியும். அதாவது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து நன்கு கலக்கி அதனை ஒரு பஞ்சு கொண்டு நனைத்து முகத்தில் மெதுவாக தடவி வர நல்ல மாற்றம் ஏற்படும்.
முகப்பருக்கு ஒரே வாரத்தில் தீர்வு..! பருவும் வராது வடுவும் தெரியாது..!
பொதுவாகவே இளம் வயதினருக்கு குறிப்பிட்ட வயதில் முகத்தில் பருக்கள் ஏற்படுவது சாதாரண விஷயம். ஆனால் அதே பருக்கள் அதிகமாக வந்தால் நம் அழகை கெடுப்பதோடு வலி ஏற்படும். அதன் அடையாளங்கள் முகத்தில் தென்படும். இதனால் மனதளவில் தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
இது போன்றவர்கள் மிக எளிதாக முகப்பருவை வரவிடாமல் தடுக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் நம் வீட்டில் உள்ள உப்பை பயன்படுத்தி முகப்பரு வராமல் தடுக்க முடியும். அதாவது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து நன்கு கலக்கி அதனை ஒரு பஞ்சு கொண்டு நனைத்து முகத்தில் மெதுவாக தடவி வர நல்ல மாற்றம் ஏற்படும். மேலும் இவ்வாறு செய்யும் போது சருமத்தில் அதிக அளவு எண்ணெய் சுரப்பு மற்றும் ஈரத்தன்மையை சற்று குறைக்கும்.
ஒரு சிலருக்கு உப்பு தண்ணீரை முகத்தில் வைக்கும்போது வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இது போன்றவர்கள் நான்கு ஸ்பூன் தேனுடன் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து முகத்தில் தடவி வர பருக்கள் வரவே வராது. இவ்வாறு தினமும் 15 நிமிடங்கள் செய்து வரலாம். மேலும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகமிக நல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு மாஸ்க் போன்று தயாரித்து முகத்தில் போட்டு வரலாம்.
இதனால் நம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பான நன்மையை கொடுக்கக் கூடியது. இது எனவே தேங்காய் எண்ணெய் இப்படியும் பயன்படுத்தி பாருங்கள். அதனால் ஏற்படக்கூடிய வடுவும் இருக்காது.