Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு..! வானிலை அறிக்கை..!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

rain will be in tamilnadu for 3 days
Author
Chennai, First Published Feb 18, 2019, 6:18 PM IST

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு..! வானிலை அறிக்கை..!  

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதிக்கு முதல் தெற்கு ஆந்திர எல்லை வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாகவும், அதே பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் காற்றின் சுழற்சி ஆளும் புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு லேசான மழையோ அல்லது மிதமான மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு நேற்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

rain will be in tamilnadu for 3 days

இதனை தொடர்ந்து இன்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 3 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சென்னையை பொருத்தவரையில் என்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios