டாய்லெட்டில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதும், போனை நோண்டுவதும் உங்கள் பழக்கமா..?
டாய்லெட்டில் உட்கார்ந்து பேப்பர் படிப்பதும், போனை நோண்டுவதும் உங்கள் பழக்கமா..?
பிரைவேசியே இல்லை என்று புலம்பும் நண்பர்கள் பெரும்பாலும் தனிமையாக சிறிது நேரம் அமர்ந்து போன் பயன்படுத்துவதும், ரிலாக்ஸ் மூட்ல செய்தித்தாள்களை டாய்லெட்டில் உட்கார்ந்து படிப்பதும் பழக்கமாக வைத்து உள்ளனர்.
இதெலாம் சரி எதற்காக இப்படி செய்கிறார்கள்...அவ்வாறு செய்வதன் மூலம் என்ன பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க...
ரத்த நாளங்கள் பெரிதும் பாதிக்கும்
நீங்க நேரமாக டாய்லெட்டில் அமரும் போது அழுத்தம் அதிகமாகி, ஆசன வாயை சுற்றி உள்ள ரத்த நாளம் அழுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படும்
ஒரு சிலர் போன் பயன்படுத்தும் போது,
அதில் 18 மடங்கு கிருமிகள் அதிகரித்து காணப்படும்.
அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் டாய்லெட்டில் அமர்ந்தவாறே போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பார்கள். இது போன்ற சமயத்தில், கிருமிகள நம் வாய் மற்றும் மூக்கு வழியாக உள் செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
அதிக நேரம் அழுத்தம் கொடுத்து பத்து நிமிடத்திற்கு மேல் அமரும் போது, மலக்குடல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது