Asianet News TamilAsianet News Tamil

தேவாலயத்தில் விபரீதம்! கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்த பிஷப்!

Kerala nun alleges bishop raped her 13 times in two years
Kerala nun alleges bishop raped her 13 times in two years
Author
First Published Jul 1, 2018, 2:31 PM IST


கிறிஸ்தவ மதகுருவான பிஷப் ஒருவர் தன்னை 2 ஆண்டுகளில் 13 முறை கற்பழித்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த 2 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை 5 பாதிரியார்கள் மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அதே கேரள மாநிலத்தில் ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பிராங்க் முல்லக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

Kerala nun alleges bishop raped her 13 times in two years

குரிவிலாங்கோடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியபோது, கடந்த 2014 ஆம் ஆண்டில் தன்னை பிஷப் பிராங்க் முல்லக்கல் முதல் முறை கற்பழித்ததாக அந்த கன்னியாஸ்திரி கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்காக, தன்னை பிஷப் பிராங்க் முல்லக்கல் அழைத்ததாகவும் அப்போது தன்னை மிரட்டி அறை ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கற்பழித்ததை வெளியில் சொன்னால், உடலுறவுக்கு தன்னை அழைத்ததாக, உன் மீது புகாரளிப்பேன் அப்போது பிஷப் மிரட்டியதால் யாரிடமும் புகார் அளிக்கவில்லை என்று கன்னியாஸ்திரி கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாம அடுத்தடுத்து அவருக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் தன்னை அழைத்து பலாத்காரம் செய்ததாகவும் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2 ஆண்டுகளில் 13 முறை தன்னை பிஷப் கற்பழித்ததாக கன்னியாஸ்திரி கூறியுள்ளார்.

Kerala nun alleges bishop raped her 13 times in two years

ஒரு கட்டத்தில் பிஷப் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறை மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டதாக கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் மறைமாவட்ட நிர்வாகம், தனக்கு வழங்கிய பணிகளையும் பறித்து வேறு இடத்திற்கு மிரட்டி அனுப்பிவிட்டதாகவும் கன்னியாஸ்திரி கூறியுள்ளார். கன்னியாஸ்திரி புகாரை தொடர்ந்து, பிஷப் பிராங்க் முல்லக்கல் மீது கோட்டயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தனக்கு உரிய நியாயம் கிடைக்காவிட்டால், போப் ஆண்டவரிடம் முறையிடப் போவதாக பாதிக்கப்பட்ட அந்த கன்னியாஸ்திரி கூறியுள்ளார்.

Kerala nun alleges bishop raped her 13 times in two years

ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பிஷப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பணியிடமாற்றம் வழங்கப்பட்டதால் தன்னை பழி வாங்க அபாண்டமான புகார்களை கூறுவதாக பிஷப் தெரிவித்துள்ளார். இதனிடையே பிஷப் – கன்னியாஸ்திரி இடையிலான பழக்கம் பரஸ்பரம் ஒப்புக்கொண்டே நடைபெற்றதாகவும், தற்போது பிஷப்புடன் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் உவந்து நிகழ்ந்த உடலுறவை பலாத்காரம் என்று கன்னியாஸ்திரி கூறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios