Asianet News TamilAsianet News Tamil

பெற்ற மகளையே பல மாதங்களாக கற்பழித்த அவலம்... மிரட்டி மிரட்டியே உடலுறவு வைத்துகொண்டது அம்பலம்!

father raped her daughter
father raped her daughter
Author
First Published May 21, 2018, 1:51 PM IST


தனது முதல் மனைவிக்கு பிறந்த மகளை 6 மாதங்களாக பலாத்காரம் செய்தார். இதை கையும் களவுமாக பிடித்த அந்த நபரின் இரண்டாவது மனைவி போலீஸில் பிடித்துக் கொடுத்தார்.

குர்கான் அருகே பட்டோடி என்ற இடத்தை சேர்ந்தவர் பிண்டு, இவர் அங்குள்ள கிராமத்தில் ஒரு சிறிய தொழிற்சாலையில் வசித்து வருகிறார். பணி முடிந்ததும் இவர் தனது குடும்பத்தினருடன் அங்கேயே தங்கிவிடுவார். பிண்டுக்கு முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகள் மற்றும் 2-ஆவது மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகள் என 4 பேர் உள்ளனர்.

பிண்டு கடந்த 6 மாதங்களாக 13 வயது சிறுமி, அதாவது தனக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த குழந்தையை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை வெளியே கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இதன் அச்சமடைந்த அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தாள். ஆனால் நாளுக்கு நாள் தந்தையின் பாலியல்  தொல்லை தாங்கிக் கொள்ள முடியாததால் தனது சித்தியிடம்  நடந்தவற்றை சொல்லி அழுதுள்ளார். ஆனால் அவரோ சிறுமி சொல்வதை நம்பவில்லை.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது சித்தி  சீக்கிரமாக வீடு திரும்ப முடிவு செய்தார். அதன்படி வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தனது மகள் என்றும் பார்க்காமல் வீட்டின் பின் பக்கத்தில் இருக்கும் அறையில் பிண்டு அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.  பின்னர் அந்த சிறுமியை போலீஸார் மாற்றாந்தாயுடன் அனுப்பி வைத்தனர்.

தான் செய்ததற்கு வருத்தப்படுவதோ குற்ற உணர்ச்சியோ ஏதும் இல்லாமல் சர்வ சாதாரணமாக காணப்பட்ட அவர் போலீஸார் நடத்திய விசாரணையில் அளித்த வாக்குமூலத்தில் அளித்துள்ளார். போலீஸாரே அதிர்ச்சியில் உறைந்தனர்.

வீட்டுக்கு வீடு இதுபோல் பாலியல் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று சிறுமியை நம்ப வைத்து தினமும் தனது மகளை உடலுறவிற்கு மிரட்டி அழைத்ததாக தந்தை பிண்டு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios