அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிப்பு! 11 பேர் காயம்...
அசாம் மாநிலத்தில் காமக்கியா-தேக்கார்கான் எக்ஸ்பிரஸ் (Kamakhya Dekargaon Express) ரயிலில் இன்று மாலை ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 11 பயணிகள் காயமடைந்தனர்.
காமக்கியா- தேக்கார்கான் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், அசாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தில் உள்ள ஹரிசிங்கா என்னும் இடத்தின் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென குண்டு வெடித்தது.
A powerful blast reported in the Guwahati-Dekargaon Inter-City Express in Udalguri district of #Assam at 7:10pm.Police suspect the explosion was caused by an #IED that was already boarded on the #Rangia to #Dekagaon Intercity train. @KirenRijiju @VoiceOfAxom pic.twitter.com/CwupU04kVt
— Asia News (@asianewsteam) December 1, 2018
இந்த பயங்கரமான குண்டுவெடிப்பில் பெண் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயமைடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹரிசிங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஓடும் ரயிலில் மாலை 6:45 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.