Asianet News TamilAsianet News Tamil

நோய்களை குணமாக்குவதில் இந்த பூக்களுக்குகூட பெரும் பங்கு உண்டு...

These flowers have a great role in curing diseases ...
These flowers have a great role in curing diseases ...
Author
First Published Jun 20, 2018, 3:09 PM IST


ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. அவ்வகையில் பூக்களும் அவை குணமாக்கும் உடலியல் பிரச்சனைகளையும் இங்கே காணலாம். 

** ஆவாரம் பூ : 

ஆவாரம் பூவைக் குடிநீரில் போட்டுக் குடித்து வந்தால் நீரிழிவு உப்பு படிதல், நீர் வேட்கை எடுத்தல் போன்றவற்றில் இருந்து குணம் கிடைக்கும். சர்க்கரை வியாதி குணமாகும். அதன் பொடியை உடலில் தேய்த்து குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும்

** செம்பருத்திப்பூ :

செம்பருத்திப்பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்தம் சுத்தி அடைவதுடன் விருத்தியும் அடையும். இதயமும் வலிமை அடையும். இப்பூவைக் கொண்டு காய்ச்சிய எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் குளிர்ச்சியும் தரும்.

** அன்னாசிப்பூ:

அன்னாசிப்பூவைத் தூளாக்கி அரை கிராம் முதல் ஒரு கிராம் எடை வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொண்டால் பசி உண்டாகும்.

** ரோஜாப் பூ :

வாய்ப்புண்ணுக்கு நல்லது.அவ்வபொழுது மென்று சாப்பிடுங்க. பாலில் கலந்து குடித்தால் ரத்த விருத்தி உண்டாகும். கபம் கரையும்.

** தாழம்பூ :

தாழம் பூவில் சர்பத் செய்து 1 மாதத்திற்கு 2 முறை குடிங்க அம்மை நோய் அண்டாது. இதய நோய்கள் நெருங்காது.

** ஒற்றை நந்தியாவட்டை

கண்ணுக்கு குளிர்ச்சி,இரவு தூங்கும் போது கண்ணில் வைத்து தூங்குங்க கண் எரிச்சல் இருக்காது. கண் பாதிப்புகள் நீங்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios