Asianet News TamilAsianet News Tamil

சளியை குணமாக்க கண்ட மாத்திரைகளை சாப்பிடாமல் இந்த இயற்கை முறையை பின்பற்றுங்கள் - நல்ல எஃபெக்ட் தரும்... 

Follow this natural method without eating tablets to cure mood - Good effect is ...
Follow this natural method without eating tablets to cure mood - Good effect is ...
Author
First Published Jun 20, 2018, 2:54 PM IST


சளி பிடித்தால் அதிலிருந்து விடுபட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இந்த இயற்கை வழிகளை பின்பற்றினாலே போதும். இந்த முறையால் சளி எளிதில் உடலில் இருந்து வெளியேறுவதோடு, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். 

** சளியை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு இஞ்சி டீ, மஞ்சள் பால் அல்லது சுடுநீர் போன்றவற்றைக் குடியுங்கள். மேலும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் தினமும் இரண்டு வேளை கொப்பளியுங்கள்.

** கண்களுக்கு கீழே கன்னப் பகுதியில் சுடுநீரில் நனைத்த துணியால் தினமும் பலமுறை ஒத்தடம் கொடுங்கள்.

** வெங்காய சாற்றில் தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் குடிப்பதன் மூலமும், தீராத சளியில் இருந்து விரைவில் விடுபடலாம்.

** சளி அதிகம் பிடித்தால், மூக்கடைப்பு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்நேரத்தில் ஆவி பிடியுங்கள். இதனால் சளி இளகி, வெளியேற ஆரம்பித்து, மூக்கடைப்பில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

** சளி பிடித்தவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், ஆன்டி-செப்டிக் பண்புகளும் ஏராளமாக உள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios