Asianet News TamilAsianet News Tamil

தந்தை கண்முன்னே மகன் வெட்டிக்கொலை... பாமக பிரமுகருக்கு வலைவீச்சு..!

கும்பகோணம் அருகே கந்து வட்டி தகராறில் தந்தை கண்முன்னே மகன் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

youth murder
Author
Tamil Nadu, First Published May 2, 2019, 11:51 AM IST

கும்பகோணம் அருகே கந்து வட்டி தகராறில் தந்தை கண்முன்னே மகன் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன் (வயது 53). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் (22). இவர் தந்தைக்கு உதவியாக மளிகை கடையில் இருந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகியிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால் கடன் தொகையை திரும்பி கொடுக்க முடியாமல் வட்டியாக மட்டும் பல லட்சம் கொடுத்துள்ளார். இதற்கிடையே கடன் கொடுத்த பாமக நிர்வாகி, கடன் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பணத்தை கொடுத்தவருக்கும் அருணுக்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. youth murder

இந்நிலையில் நேற்று இரவு மளிகை கடையில் தனது தந்தை சிவசுப்பிரமணியனுடன், அருண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத 2 பேர் மளிகை கடைக்குள் புகுந்து அருணை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்தனர். இதில் நிலைகுலைந்து அருண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினார். youth murder

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்  ‘கொடுத்த கடனை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை ஏவி அருணை கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios