நடத்தையில் சந்தேகம்... மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவர்!
ஈரோடு அருகே நடத்தையில் மீது சந்தேகம் அடைந்ததால் மனைவியை மண் வெட்டியால் வெட்டி படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே நடத்தையில் மீது சந்தேகம் அடைந்ததால் மனைவியை மண் வெட்டியால் வெட்டி படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள பெரிய கள்ளியூர் காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 47). விவசாயி டிப்பர் லாரி வைத்தும் ஓட்டி வருகிறார். இவருக்கும் விஜயசாந்தி என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் மனைவி விஜயசாந்தி வேறு நபருடன் செல்போனில் பேசுவதாக கூறி தர்மன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது.
கடும் ஆத்திரமடைந்த தர்மன் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த விஜயசாந்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார். இது சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தர்மனை கைது செய்தனர். பிறகு உயிரிழந்த விஜயசாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.