மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 61 வயது பாஜக பிரமுகர்... திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
சிவகங்கையில் புதுமணப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக கட்சி பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் புதுமணப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக கட்சி பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் ஜெயராணி. இவர் சிவகங்கை அருகே பச்சேரியை பூர்வீகமாக கொண்டவர். இவரது மகனுக்கு சிவகங்கை அருகே மதுரை ரோட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுடன், கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தம்பதி சென்னையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் புது மணப்பெண்ணுக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்றரை மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக மணப்பெண்ணிடம் விசாரித்த போது, சிவகங்கையில் மதுரை முக்கில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தபோது, நர்சிங் கல்லூரி உரிமையாளரும், முதல்வருமான சிவகுருதுரைராஜ் (61) தனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் கொன்று விடுவேன் மிரட்டியால் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.
தற்போது, சிவகங்கை மாவட்ட பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக சிவகுருதுரைராஜ் இருந்து வருகிறார். இது தொடர்பாக உடனே மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி குடும்பத்தினர் புகார் அளித்தினர். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகுருதுரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக பிரமுகர் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.