Asianet News TamilAsianet News Tamil

இடையூறாக இருந்த கள்ளக் காதலியின் கணவர் ! போட்டுத் தள்ளிய கூட்டுறவு வங்கி செயலாளர் கைது !!

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலியின் கணவரை கார் ஏற்றி கொன்ற  கூட்டுறவு வங்கி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

illegal contact and murder
Author
Manalmedu, First Published Oct 14, 2019, 8:15 AM IST

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே நாராயணமங்கலம் மெயின் ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி ஒருவர் வாகன விபத்தில் இறந்து கிடப்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  மணல்மேடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் மணல்மேடு அருகே உக்கடை கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பது தெரியவந்தது. ராஜகோபால் இறந்து கிடந்த இடத்தின் அருகே மரத்தில் மோதிய நிலையில் ஒரு காரும், அதன் அருகில் ராஜகோபால் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் கிடந்தன. இதனால் போலீசார் விபத்தில் ராஜகோபால் பலியானதாக வழக்குப்பதிவு செய்தனர்.

illegal contact and murder

ஆனாலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிலர் சதி திட்டம் தீட்டி ராஜகோபாலை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.

அதாவது  கொலை செய்யப்பட்ட ராஜகோபாலின் மனைவியுடன், இளந்தோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பட்டவர்த்தியை சேர்ந்த அமீர்ஹதர்கான் என்பவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த ராஜகோபால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

illegal contact and murder

இதைத்தொடர்ந்து போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பட்டவர்த்தியை சேர்ந்த ராஜேஷ் சேத்தூரை சேர்ந்த சிவசிதம்பரம் , கர்ணன் , சத்தியராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த அமீர்ஹதர்கானை போலீசார் பட்டவர்த்தியில் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios