Asianet News TamilAsianet News Tamil

மனைவியுடன் கள்ளத்தொடர்பு… காதலனை மொட்டை மாடியில் வைத்து கண்டம் துண்டமா வெட்டி எறிந்த கணவன் !!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவரை கணவன் கண்டம் துண்டமா வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

illegal contact and murder
Author
Madurai, First Published Dec 4, 2018, 10:42 AM IST

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பிரேம்குமார் . இவர் கூத்தியார்குண்டு மெயின் ரோடில் லேத் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரிந்துவிட்டனர். அவர்களுக்கிடையே விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

illegal contact and murder

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் வீட்டின் அருகே அவரது உறவினரான பிரகாஷ்  என்பவர்  தனது மனைவியுடன் குடி வந்தார். பிரகாஷ் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

உறவினர்கள் என்ற முறையில் பிரேம்குமாரும், பிரகாசின் மனைவியும் நெருக்கமாக பழகி வந்தனர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்த வி‌ஷயம் பிரகாசுக்கு தெரியவரவே, பிரேம்குமாருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனையடுத்து பிரகாஷ் தோப்பூரில் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு தனது மனைவியுடன் மதுரையை அடுத்த கருப்பாயூரணிக்கு சென்றார்.

illegal contact and murder

அங்கு சென்ற பிறகு தொழில் தொடர்பாக பிரகாஷ் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதனை அறிந்த பிரேம்குமார், கருப்பாயூரணிக்கு சென்று பிரகாசின் மனைவியுடன் கள்ளக்காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பிரகாசுக்கு தெரியவர 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை பிரேம்குமார் தனது வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரகாஷ் உள்பட 3 பேர் வீட்டின் பின்பக்க காம்பவுண்டு சுவர் ஏறி உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் மாடிக்கு சென்று தூக்கத்தில் இருந்த பிரேம்குமாரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கண்டதுண்டமாக வெட்டி கூறு போட்டனர்

illegal contact and murder

இதனைப் பார்த்த பிரேம்குமாரின் தாய் அமுதா கத்தி கூச்சல் போட்டுள்ளார். அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர்  வீட்டிற்குள் வரவதற்குள் பொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர்.

இதுதொடர்பாக அமுதா ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் பாலன், பாண்டி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios