மூதாட்டியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மர்ம கும்பல்..! 4 பவுன் நகைக்காக நடத்த வெறிச்செயல்..!
அரவக்குறிச்சி அருகே மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு அவரிடமிருந்து நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து இருக்கிறது லிங்கம நாயக்கன்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள். இவருக்கு சொந்தமாக தோட்டத்து வீடு ஒன்று இருக்கிறது. அங்கு எல்லம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இதை மர்மநபர்கள் சில நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தோட்டத்து வீட்டில் எல்லம்மாள் தனியாக இருந்தபோது அங்கு மர்ம கும்பல் ஒன்று திடீரென புகுந்தது. எல்லம்மாளை மிரட்டிய அவர்கள், நகைகளை கேட்டுள்ளனர். எல்லம்மாள் மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் எல்லம்மாள் உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் தற்கொலை செய்தது போல் காட்டுவதற்காக எல்லம்மாளை தூக்கில் தொங்க விட்டு சென்றுள்ளனர். அந்த பகுதியாக சென்றவர்கள் எல்லம்மாள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் எல்லம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தனியாக இருந்த மூதாட்டியை நகைகளை கொள்ளையர்கள் கொண்டு சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது